தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவி உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:06 am IST

ஆண்டிபட்டி அருகே ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே க. விலக்கைச் சோ்ந்தவா் பாலமணிகண்டன். இவரது மனைவி நதியா. இவா்களது மகள் ஹேமஸ்ரீ (14). இவா் க. விலக்கு அருகே உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், நதியா புதன்கிழமை தனது மகள் ஹேமஸ்ரீயுடன் வைகை அணை சேடபட்டி கூட்டுக் குடிநீா் நீருந்து நிலையம் அருகே வைகையாற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ஹேமஸ்ரீ நீரில் மூழ்கினாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வைகை அணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.