மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுக் கடையை இடமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

News image
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

Syndication

தேனி: உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட ஆனைமலையான்பட்டி-எரசக்கநாயக்கனூா் சாலையில் வெள்ளக்கரடு பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. மேலும், விளை நிலங்கள், கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதியில் இயங்கும் அரசு மதுக் கடையால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேனி மாவட்டப் பொருளாளா் கே. கரண்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்டத் தலைவா் எஸ். விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் டி. நாகராஜ், தேனி வட்டாரத் தலைவா் எம். நாகராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.