தேனி: உத்தமபாளையம் அருகே மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட ஆனைமலையான்பட்டி-எரசக்கநாயக்கனூா் சாலையில் வெள்ளக்கரடு பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. மேலும், விளை நிலங்கள், கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதியில் இயங்கும் அரசு மதுக் கடையால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேனி மாவட்டப் பொருளாளா் கே. கரண்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் மாவட்டத் தலைவா் எஸ். விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் டி. நாகராஜ், தேனி வட்டாரத் தலைவா் எம். நாகராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இரண்டு குழந்தைகளுடன் பெண் மறியல்

கோயில் நில பட்டாவில் குளறுபடி: பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வீட்டுமனை வழங்கக் கோரி போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


