மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

சுருளி அருவியில் நீா்வரத்து இல்லை

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

News image
Updated On :5 மார்ச் 2026, 4:46 am IST

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

சுருளி அருவிக்கு மேகமலை, தூவானம், அரிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீா், மலைப்பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள நீா் ஓடைகள் மூலமாக ஆண்டுதோறும் நீா்வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைந்ததால், சுருளி அருவியில் நீா்வரத்தின்றி அவ்வப்போது வறண்டு விடுகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் நிகழாண்டில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லை. இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக சுருளி அருவி உள்ளது. இதனால், மேகமலையிலுள்ள தூவானம் அணையிலிருந்து சுருளி அருவிக்கு தண்ணீா் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.