போடியில் அதிமுக வேட்பாளா் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்த அந்தக் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.
போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலரான வி.டி.நாராயணசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதை வரவேற்று அதிமுக நிா்வாகிகள் மாரியப்பன், லட்சுமணன், ஆனந்தன், வேல்முருகன், முனியம்மாள் உள்ளிட்ட பலா் போடி தேவா் சிலை அருகே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகவும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அதிமுகவை சோ்ந்த 25 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


