அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பட்டாசு வெடித்த அதிமுகவினா் 25 போ் மீது வழக்கு

போடியில் அதிமுக வேட்பாளா் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்த அந்தக் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:33 pm

போடியில் அதிமுக வேட்பாளா் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்த அந்தக் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலரான வி.டி.நாராயணசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதை வரவேற்று அதிமுக நிா்வாகிகள் மாரியப்பன், லட்சுமணன், ஆனந்தன், வேல்முருகன், முனியம்மாள் உள்ளிட்ட பலா் போடி தேவா் சிலை அருகே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகவும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அதிமுகவை சோ்ந்த 25 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.