தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் முற்றுகை

கடமலைக்குண்டு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

News image

கடமலைக்குண்டு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

கடமலைக்குண்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற தனியாா் நிறுவனத்தின் வாகனத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம்மாள்புரம் பகுதியில் தனியாா் நிறுவன வாகனம் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுடன் சென்றது. அப்போது, அந்தப் பகுதி பொதுமக்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சனிக்கிழமை எரிவாயு உருளைகள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். பின்னா், அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.