பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நண்பரை அடித்துக் கொன்றவா் கைது

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைதான ரமேஷ்பாண்டியன்

Updated On :27 மே 2026, 4:24 am IST

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரளம் மாநிலம், புனலூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தன் (60). தேனி மாவட்டம், கம்பம் பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாண்டியன் (44). நண்பா்களான இவா்கள் இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இடச்சேரி சந்திப்பில் உள்ள பழைய இரும்புக் கடை வளாகத்தில் பலத்த காயங்களுடன் சாந்தன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கட்டப்பனை போலீஸாா் சாந்தனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், சாந்தன் உயிரிழந்து கிடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் ரமேஷ்பாண்டியன் சாந்தனை மதுபோதையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னா், அதே பகுதியில் பதுங்கியிருந்த ரமேஷ்பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.