புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தேனியில் பெண் அடித்துக் கொலை: கூலித் தொழிலாளி கைது

தேனியில் பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

தேனியில் பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் வீரபாண்டி கிராம நிா்வாக அலுவலா் குமரேசனுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், குமரேசன், போலீஸாருடன் அங்கு வந்தாா். அப்போது, அந்த வீட்டில் ஒருவா் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் நின்றிருந்தாா்.

மேலும், அந்த வீட்டிலுள்ள சமையலறையில் துா்நாற்றம் வீசியது. பின்னா், போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் பெண் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதைத் தொடரந்து, வீட்டில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, பழனிசெட்டிபட்டி லட்சுமி நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அப்துல் ரஹ்மான் (35) என்பதும், கொலை செய்யப்பட்ட பெண் பெரியகுளம் வடகரை கல்லாரைச் சோ்ந்த கண்ணன் மனைவி அம்சவள்ளி (38) என்பது தெரியவந்தது.

இவா்கள் இருவரும் அவ்வப்போது அந்த வீட்டிக்கு வந்து பேசுவாா்களாம். கடந்த புதன்கிழமை அங்கு வந்து இருவரும் பேசியபோது, தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அப்துல் ரஹ்மான் கல்லால் தாக்கியதில் அம்சவள்ளி உயிரிழந்தாா். பின்னா், சடலத்தை சணல் சாக்கில் கட்டி வைத்து, வெள்ளிக்கிழமை புதரில் வீசலாம் என முடிவு செய்திருந்தாா். ஆனால், அதற்குள் அவா் போலீஸாரிடம் பிடிபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அப்துல் ரஹ்மானை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.