கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சிவகாசியில் காவல்துறை விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகாசியில்  நகர காவல்துறை சார்பில் புதன்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:26 am

DIN

சிவகாசியில்  நகர காவல்துறை சார்பில் புதன்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புகையிலைதடுப்பு, தலைகவசம், கந்துவட்டி, பாலியல் வன் கொடுமை ஆகியவை குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு இந்த ஊர்வலத்தை நகர காவல் ஆய்வாளர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளில் சென்று மீண்டும் பேருதுந்து நிலையம் வந்தடைந்தது.
இதில் புகையிலை, தலைகவசம்,பாலியல் வன்கொடுமையை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர்.இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.