விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் மாவட்டப் பொருளாளர் வழக்குரைஞர் செ. பிரபாகரமூர்த்தி, மாவட்டத் தலைவர் வை. மாடசாமி ஆகியோர் தலைமையில், அக்கட்சித் தொண்டர்கள் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள் வழங்கினர். மேலும், பல்வேறு பள்ளி மாணவ, மாணவியருக்கு 1,500 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர். நிகழ்ச்சியில், துணைத் தலைவர் ராமராசு, நகரச் செயலர் சுபாசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.