கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தூா் அருகே 75 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

சாத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 75 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

News image
சாத்தூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்.
Updated On :22 டிசம்பர் 2020, 6:02 pm

DIN

சாத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 75 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் காா்த்திக் செல்வம் தலைமையிலான போலீஸாா் சாத்தூா் அருகே முத்தால்நாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 75 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக வாகனத்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மகாதேவா்பட்டியை சோ்ந்த சத்தியமூா்த்தியை(37) சாத்தூா் போலீஸாா் கைது செய்து, சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.