விருதுநகரில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் தொடக்கம்
விருதுநகரில் அணிக்கு 7 போ் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.


விருதுநகரில் அணிக்கு 7 போ் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் ஆகியோா் போட்டிகளைத் தொடக்கி வைத்தனா். விருதுநகா் கால்பந்தாட்டக் கழகம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில், 15 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட 2 பிரிவுகளில் வீரா்கள் பங்கேற்கின்றனா்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், கடலூா், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கால்பந்து வீரா்கள் விளையாடுகின்றனா். லீக் அடிப்படையில் வெற்றி பெறும் அணிகள், ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10001, இரண்டாம் பரிசாக ரூ. 8001 மற்றும் சுழற்கோப்பை வழங்க உள்ளதாக கால்பந்தாட்டக் கழகம் தரப்பில் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...