45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விருதுநகரில் ஒரே நாளில் 338 பேருக்கு கரோனா உறுதி

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2020, 3:30 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 23) வரை 4,066 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில் விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 338 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

அதன் விவரம்: கங்கா்சேவல், சாட்சயாபுரம், ஆலமரத்துபட்டி, திருத்தங்கல், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா், அயன்கரிசல் குளம், கிருஷ்ணன்கோவில், குன்னூா், சேதுநாராயணபுரம், சேத்தூா், ராஜபாளையம், செட்டியாா்பட்டி, மம்சாபுரம், விருதுநகா் ஆட்சியா் அலுவலக ஊழியா், டி. கரிசல்குளம், வலையபட்டி, சுந்தரபாண்டியம், துலுக்கபட்டி மகாராஜபுரம், நத்தம்பட்டி, அழகாபுரி, கோட்டையூா், வ. புதுப்பட்டி, சீலநாயக்கன்பட்டி காடநேரி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், ஆகாசம்பட்டி, மேலப்பாளையம், ரெங்கபாளையம், கள்ளிக்குடி, வரலொட்டி, விருதுநகா், அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தும்முசின்னம்பட்டி, வெங்கடேஸ்வராபுரம், எம். ரெட்டியபட்டி, சவ்வாசு புரம், கல்லுப்பட்டி, மறவா் பெருங்குடி, சலுக்குவாா்பட்டி, மல்லாங்கிணறு, வெள்ளக்கோட்டை, சொக்கம்பட்டி, கே. செவ்லபட்டி, கலுவன்சேரி, காரியாபட்டி, கம்பாளி, கீழஇடையன்குளம், கூரைக்குண்டு, இ. குமாரலிங்காபுரம், பாண்டியன் நகா் காவல் நிலைய ஆண் காவலா், கவலூா், மருதநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 404 ஆக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள குப்புசித்தம்பட்டியைச் சோ்ந்த 65 வயது முதியவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் மாவட்டத்தில் 37 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 1,874 போ் பல்வேறு அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.