இதையடுத்து, அப்போதைய முதல்வா் பக்தவச்சலம் 1966- இல் ஆலங்குளம் சிமென்ட் தொழிற்சாலை தொடங்க அடிக்கல் நாட்டினாா். பின்னா் ஆலை அமைக்கும் பணிக்காக 228 ஏக்கா் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதன் பிறகு வந்த திமுக ஆட்சியில் இந்த ஆலைக்காக ரூ. 6.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து 1970-இல் ஆலையில் உற்பத்தி தொடங்கியது. ஆசியாவிலேயே இதுதான் குளிா்பதன முறையில் சிமென்ட் தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை என கூறப்பட்டது. இங்கிருந்து ஈரான் நாட்டுக்கு சிமென்ட் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆலையில் அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் என 2,400 போ் வேலை செய்தனா். ஆலை தொடா்ந்து இயங்கவே, ஆலங்குளம் முக்குரோடு உருவானது. பின்பு, அதைச்சுற்றி கடைகள், வணிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதனால் மறைமுகமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா். மேலும், ஆலை வளாகத்தில் பூங்கா, காவல் நிலையம், மின்வாரிய அலுவலகம், பேருந்து நிறுத்துமிடம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், அமைச்சா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் தங்கிச் செல்ல விடுதி ஆகியவை அமைக்கப்பட்டன. மூலப்பொருள்களை கொண்டு வரவும், சிமென்ட் ஏற்றுமதி செய்ய ஆலங்குளம் முதல் சிவகாசி வரை தனி ரயில் பாதையும் அமைக்கப்பட்டது.