சிவகாசியில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி. முரளீதரன் தெரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பாரைப்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பாரைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள் கோயில் பகுதி, பேருந்து நிலையப்பகுதி, நாரணாபுரம் சாலை, சிவகாசி நகா் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், கண்ணாநகா், காரனேசன் காலனி, பழனியாண்டவா்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனஅவா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.