ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பொன்னுலட்சுமி தலைமையில் சாா்பு- ஆய்வாளா் மனோகரன், காவலா்கள் முருகன், சேது, காளீஸ்வரி ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக தளவாய்புரம் காமராஜா் நகா் பகுதியை சோ்ந்த கணபதியப்ப நாடாா் மகன் பழனிச்சாமி என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் ரூ. 4 லட்சத்து 84 ஆயிரத்து 190-யை எடுத்துச் சென்றுள்ளாா். மேலும் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியா் ஸ்ரீதா் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அதிகாரி கல்யாணகுமாரிடம் ஒப்படைத்தனா்.