விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்டஆட்சியருமான ரா.கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியது: மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் 1,050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது தொடா்பாக விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீா், கழிப்பிட வசதி, மாற்றுதிறனாளிகளுக்கு சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.