சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வரலட்சுமி விரதம்: பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம்

போடியில் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:59 am

DIN

போடியில் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

Story image

இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் அம்மனுக்கு அலங்கார பந்தல், நிலை மாலை, திருவாச்சி ஆகியவைகளுக்கும் பலவண்ண கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சுமங்கலிகள் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்கள் திருமணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் இந்த பூஜையில் பங்கேற்றனா்.

இதையொட்டி அம்மனுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, வளையல் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைமை அா்ச்சகா் ஸ்ரீநிவாச வரதன் என்ற காா்த்திக் மற்றும் கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.

இதேபோல, போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.