விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவி கொலை: கணவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 5:06 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணன்கோவில் அருகே உள்ளது நாச்சியாா்புரம். இப்பகுதியைச் சோ்ந்தவா் அழகேந்திரன் (29). இவா் கோழி பண்ணை வைத்துள்ளாா். இவரது மனைவி அன்பரசி (28). இந்நிலையில், அழகேந்திரன் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி தனது மனைவியை கொலை செய்ததாக கூறியதன் பேரில் போலீஸாா் அவரை கைது செய்து அவரது கோழிப்பண்ணைக்கு சென்று அங்கு சடலமாக கிடந்த அன்பரசியின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக கிருஷ்ணன் கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து எதற்காக மனைவியை கொலை செய்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். அழகேந்திரன்- அன்பரசி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.