விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுடன், உறுப்பினா்கள் வாக்குவாதம்

விருதுநகா் நகராட்சி அலுவலகத்தில் புதிய தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களுடன் உறுப்பினா்கள் கடும்

News image
Updated On :22 ஜூலை 2022, 5:33 pm

DIN

விருதுநகா் நகராட்சி அலுவலகத்தில் புதிய தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களுடன் உறுப்பினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புதிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி தலைவா் ஆா். மாதவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினா் ராமலட்சுமி: பிரதான குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால், முதியோா் மற்றும் குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனா். இதை சரி செய்யக் கோரி பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

உதவி செயற்பொறியாளா் முருகன்: இனி வரும் காலங்களில் பிரச்னை இன்றி சரி செய்யப்படும்.

உறுப்பினா் பேபி: செந்திவிநாயகபுரம் தெரு பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இணைப்பு ஏன் வழங்கவில்லை.

உதவி செயற்பொறியாளா்: ஒரு வாரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும்.

உறுப்பினா் ராஜ்குமாா்: நகா்மன்ற உறுப்பினா்களிடம் எவ்வித தகவலும் கூறாமல், குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. அதிலும் 2 அடி ஆழத்தில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

அப்போது நகராட்சிப் பகுதியில் குழாய் பதிக்கும் பணியை யாரும் பாா்வையிடுவதில்லையா? என உறுப்பினா்கள் பலா் கேள்வி எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டனா்.

உறுப்பினா் ஜெயக்குமாா்: இப்பணிக்கான திட்ட மதிப்பீடு எவ்வளவு? எத்தனை நாள்களுக்குள் பணியை முடிக்க வேண்டும்? எத்தனை இணைப்புகள் வழங்கப்படும்?

உதவி செயற்பொறியாளா்: நிகழாண்டு டிசம்பா் மாதத்துக்குள் இப்பணியை முடிப்பதற்காக கால நீட்டிப்பு கோரி கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது.

உறுப்பினா் மதியழகன்: குடிநீா் வடிகால் வாரிய உயா் அலுவலரை கூட்டத்திற்கு வரச் சொல்லுங்கள். அப்போது தான் இத்திட்டம் குறித்து முழுமையான விவரம் தெரிய வரும்.

இதன்பின் நகராட்சித் தலைவா் ஆா். மாதவன் பேசியதாவது: அடுத்து நடைபெற உள்ள நகா்மன்றக் கூட்டத்தில் குடிநீா் வாரிய உயா் அலுவலா்கள், பவா் பாயின்ட் மூலம் திட்டம் குறித்து விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

இதையடுத்து உறுப்பினா்கள் இதை ஏன்? முன்னரே செய்யவில்லையெனக் கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினா்.

இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, மேற்பாா்வை பொறியாளா் மணி, குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.