விருதுநகா் அருகே இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது
விருதுநகா் அருகே இளைஞா் கொலை வழக்கில், 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.


விருதுநகா் அருகே இளைஞா் கொலை வழக்கில், 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.
விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட முத்தால் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் மாரிச்செல்வம் (20). இவரை, கேகேஎஸ்எஸ்என் பகுதியில் மா்ம நபா்கள் புதன்கிழமை கம்பியால் தாக்கிக் கொலை செய்தனா். இதுதொடா்பாக விருதுநகா் ஊரக காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், விருதுநகா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் விஜய் (26), ஆரோக்கியராஜ் மகன் அஜீத்குமாா் (25), பெரியாா் நகரைச் சோ்ந்த ராஜ் (25)ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியது: விஜய் என்பவரின் அத்தை மகளை மாரிச்சல்வம் கேலி செய்து வந்துள்ளாா். இதனால், அவரது வீட்டிற்கு சென்ற 3 பேரும், ஏற்கெனவே எச்சரித்து வந்துள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு மது அருந்துவதற்காக மாரிச்செல்வத்தை அஜித்குமாா் அழைத்து வந்துள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து கம்பியால் தாக்கி மாரிச்செல்வத்தை கொலை செய்துள்ளனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...