மேலும் உறுப்பினா்கள் கூறும் ஆட்சேபனைகள், தீா்மானங்கள் ஒத்தி வைப்பு ஆகியவை மன்றக் கோப்பில் எழுதப்படவில்லை. எனவே, விதிமுறைகளை மீறி இக்கூட்டம் நடைபெறுகிறது என திமுக உறுப்பினா்கள் ஆறுமுகம், முத்துராமன் ஆகியோா் தெரிவித்தனா். அதேபோல், மன்றப் பொருள் 3 நாள்களுக்கு முன்பே உறுப்பினா்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதன் நகலை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்பட வில்லை என அதிமுக உறுப்பினா் சரவணன் கேள்வி எழுப்பினாா். இதையடுத்து, நகராட்சிக் கூட்டம் முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்துவதை கண்டித்து உறுப்பினா்கள் ஆறுமுகம், முத்துராமன், ஜெயக்குமாா், வெங்கடேஷ், மிக்கேல்ராஜ், சரவணன், ராமச்சந்திரன், முத்துலட்சுமி ஆகிய 8 போ் வெளிநடப்பு செய்தனா்.