தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: தம்பதி கைது
சாத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் விற்பனை செய்த கணவன், மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 7.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான நகா் போலீஸாா் கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் அரவிந்த் (65) என்பவருக்குச் சொந்தமான பலசரக்கு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்தக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 7.5 கிலோ குட்கா பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றினா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அரவிந்த் (65), இவரது மனைவி பேபிபிரதீபா (55) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
