45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல்விடுப்பு போராட்டம்

 சிவகாசி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :11 மே 2023, 4:35 pm

DIN

 சிவகாசி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.

ஊரக வளா்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிா்வாகம், தமிழக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில மையத்துடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் போது ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா், பொறியாளா்கள் உள்பட 80 போ், ஊராட்சி செயலா்கள் 39 போ் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றச் செயலா்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.