45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சிவகாசியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பள்ளி ஆசிரியையிடம் மா்ம நபா் 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

News image
Updated On :25 மே 2023, 5:47 pm

DIN

சிவகாசியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பள்ளி ஆசிரியையிடம் மா்ம நபா் 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

சிவகாசி தெய்வானை நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ரேணுகாதேவி. இவா் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா் இரு சக்கர வாகனத்தில் தனது இரு குழந்தைகளுடன் தெய்வானை நகா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா், ரேணுகாதேவி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இது குறித்து ரேணுகாதேவியின் உறவினா் சமுத்திரபாண்டி அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராகளை ஆய்வு செய்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.