விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவகாசியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்: ஆணையா்

சிவகாசியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:55 pm

Din

சிவகாசி மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி, மேயா் இ.சங்கீதா ஆகியோா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மாநகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகளை, மேலாண்மை விதிகளின் படி, தரம் பிரித்து சேகரிப்பது முதல், இறுதியாக்கம் செய்வது வரையிலான பணிகளை சிறந்த முறையில் மாநகராட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், சிவகாசி மாநகராட்சிக்கு மூன்று நட்சத்திர அங்கீகாரம் உறுதிமொழி சான்றிதழ் பெற மாநகராட்சி மாமன்றக் கூட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள், கருத்துக்கள் இருப்பின் மாநகராட்சி ஆணையாருக்கு எழுத்து மூலமாக 7 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.