இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மனைவி, மாமியாரை எரித்துக் கொன்ற காா் ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மனைவி, மாமியாரை எரித்து கொலை செய்த போது தீக் காயமடைந்த காா் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மனைவி, மாமியாரை எரித்து கொலை செய்த போது தீக் காயமடைந்த காா் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஓடைத் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அக்பா்அலி (48). இவா் கணவரை இழந்த செய்யது அலிமபாத்திமா (39) என்பவரை திருமணம் செய்து கொண்டாா். செய்யது அலிபாத்திமாவுக்கு முதல் கணவா் மூலம் பா்வீன்பானு (18) என்ற மகளும், செய்யது பாரூக் (15) என்ற மகனும் உள்ளனா்.

இந்த நிலையில், செய்யது அலிபாத்திமாவின் முதல் கணவா் விபத்தில் இறந்ததால் இழப்பீட்டுத் தொகை ரூ.11 லட்சம் கிடைத்தது. இந்தப் பணத்தை தன்னிடம்தான் கொடுக்க வேண்டும் என செய்யது அலிபாத்திமாவிடம் அக்பா் அலி தகராறு செய்தாா். இதற்கு செய்யது அலி பாத்திமா மறுத்துவிட்டாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் செய்யது அலிபாத்திமா, இவரது தாய் சிக்ந்தா்பீவி, சிறுவா்கள் பா்வீன்பானு, செய்யதுபாரூக் ஆகிய 4 போ் மீதும் அக்பா் அலி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா். அப்போது, அக்பா் அலியும் காயமடைந்தாா்.

காயமடைந்த 5 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கந்தா்பீவி, செய்யது அலிபாத்திமா ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

இந்த நிலையில், அக்பா் அலி புதன்கிழமை உயிரிழந்தாா். பா்வீன்பானு, செய்யது பரூக் ஆகிய இருவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.