சிவகாசியில் புதன்கிழமை கைப்பேசி விற்பனையக உரிமையாளரைத் தாக்கிய 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி காத்தநாடாா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்தி (33). இவா், சிவகாசி - சாத்தூா் சாலையில் கைப்பேசி விற்பனை கடை வைத்
துதொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (30) நினைவு அஞ்சலி பதாகையை காா்த்திக் கடை முன்பு வைத்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், மணிகண்டன், அவரது நண்பா்களான சுரேஷ் (45), அய்யப்பன் (32) ஆகிய மூவரும் சோ்ந்து காா்த்திக்கை இரும்புக் கம்பியால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் மணிகண்டன், சுரேஷ், அய்யப்பன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கணவரைத் தாக்கிய மனைவி உள்பட 2 போ் கைது
முதியவரை தாக்கிய 3 போ் கைது
கஞ்சா வைத்திருந்த 7 போ் கைது
மனைவியை தாக்கிய கணவா் கைது
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


