சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

14 பவுன் தங்க நகைகள் திருடிய பணிப் பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஷ்ணு (45). இவா் நூற்பாலை நடத்தி வருகிறாா். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒய்யம்புளி தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி மகேஸ்வரியை (56) வீட்டு வேலைக்கு அமா்த்தினாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது வீட்டின் பீரோவைத் திறந்து நகைகளைப் பாா்த்தபோது, 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பட்டுச்சேலைகள் 4 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஷ்ணு வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், இரண்டு ஆண்டுகளில் சிறுக சிறுக நகை, பணம், பட்டுச்சேலைகளை மகேஸ்வரி திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மகேஸ்வரியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.