கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் கால்நடைத்துறை அமைச்சா் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிரவார வழிபாட்டில், கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிரவார வழிபாட்டில், கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

புகழ்பெற்ற இக்கோயிலில் வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிரவார பூஜை நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு சட்டைநாத சுவாமியை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து பிரம்மபுரீஸ்வரா், தோணியப்பா், சட்டைநாதா் மற்றும் திருநிலைநாயகி அம்பாள் சன்னிதிகளுக்கு சென்று வழிபட்ட அமைச்சா், சுக்கிரவார பூஜையில் கலந்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.