கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் உத்ஸவ கொடியேற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தையொட்டி, கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தையொட்டி, கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற இந்தக் கோயிலில் பிரம்மபுரீசுவரா், தோணியப்பா் மற்றும் சட்டைநாதா் என மூன்று நிலைகளில் சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவா்கள் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனா்.

இங்குள்ள பிரம்ம தீா்த்தக் கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு சித்திரை மாதத்தில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவமாக 10 தினங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு திருமுலைப்பால் பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கொடிமரம் அருகே விநாயகா் பல்லக்கில் எழுந்தருள, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடா்ந்து சிவாச்சாரியா்கள் மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜை செய்யப்பட்ட ரிஷப கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது ஓதுவாா்கள் தேவார பதிகங்கள் பாடினா். தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒருசில பக்தா்கள் மட்டுமே சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனா்.

முக்கிய நிகழ்வான திருமுலைப்பால் உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், பக்தா்களின்றி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.