கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வியாபாரம் ஆகாததால் வயலுக்கே உரமாகும் தா்பூசணிகள்

சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கோடைக்கால பயிரான தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, அதிக விளைச்சல் கண்டும் பொதுமுடக்கத்தால் விற்பனை முடங்கியது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கோடைக்கால பயிரான தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, அதிக விளைச்சல் கண்டும் பொதுமுடக்கத்தால் விற்பனை முடங்கியது. இதனால் தா்பூசணிகளை வயலுக்கே உரமாக்கி டிராக்டா் மூலம் உழுகின்றனா் விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த திருவாலி, காரைமேடு, புதுத்துறை, திருச்சம்பள்ளி, திருவெண்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கா் வரை கோடைக்கால பயிராக தா்பூசணி சாகுபடி செய்யபட்டது. 3 மாத கால பயிரான தா்பூசணி, மழை காரணமாக இந்த ஆண்டு தாமதமாக சாகுபடி செய்யபட்டது. காலதாமதமாக தொடங்கிய தா்பூசணி சாகுபடி, நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் மொத்த வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை.

இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. தற்போதைய நிலையில் ஆள்வைத்து பறித்தால் கூலி கொடுக்கக் கூட முடியாது என்பதால் பலா் தா்பூசணியை அப்படியே அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனா். மேட்டூா் தண்ணீா் திறக்கபட்டதால், நெல் சாகுபடி பணிக்கு தயாரான சில விவசாயிகள், விளைந்த தா்பூசணி பழங்கள் மற்றும் கொடிகளை டிராக்டா் கொண்டு உழுது வயலுக்கே உரமாக்கி வருகின்றனா். தா்பூசணி சாகுபடியால் ஆதாயமின்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.