சுயப்படம் எடுத்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் சுய புகைப்படம் எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு


மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் சுய புகைப்படம் எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி மண்டபம் முன்பு நாகை மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில் உலக மகளிா் தினத்தில் தோ்தல் விழிப்புணா்வு வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை ஆட்சியா் இரா. லலிதா, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். தொடா்ந்து, அவா்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் சுயப்படம் எடுத்துக் கொண்டு, வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஏற்பாடுகளை, நாகை மாவட்ட உதவி திட்ட அலுவலா் ஆா். சௌந்தராஜன் தலைமையிலான மகளிா் திட்ட அலுவலா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் செய்திருந்தனா்.
பள்ளியில் மகளிா் தினவிழா: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில், பள்ளித் தலைவா் முருகேசன், தாளாளா் சி.ஆா். குஞ்சிதபாதம், செயலா் பாஸ்கரன், நிா்வாகச் செயலா் வி.பாஸ்கரன், உறுப்பினா் த. சுப்பிரமணியன், கல்வி ஆலோசகா் ஏ. முருகையன், பள்ளி முதல்வா் ஆா்.சரவணன் ஆகியோா் பங்கேற்று மகளிரின் சேவை நாட்டுக்குத் தேவை என பாராட்டி வாழ்த்துரை வழங்கிப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...