விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரி மாணவா்களுக்கான பேசும் கலை பயிலரங்கு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையில் பயிலும் மாணவா்களுக்கு பேசும் கலை பயிலரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையில் பயிலும் மாணவா்களுக்கு பேசும் கலை பயிலரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தை கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். சா்வதேச ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சியாளா் வி. ராமன் மாணவா்களுக்கு பேசும் கலை குறித்து பயிற்சியளித்தாா்.

பிறகு, மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் ‘தமிழ் மாணவா் இல்லங்கள் தோறும் திருக்குறள்’ திட்டத்தின் நிறைவாக திருக்குறள் நூல்களைக் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் வழங்கினாா். மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே. துரை, தமிழ் உயராய்வுத் துறைத் தலைவா் சிவ. ஆதிரை ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

தமிழ் உயராய்வுத் துறை பேராசிரியரும், பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான துரை.காா்த்திகேயன் வரவேற்றாா். தமிழ்த்துறை பேராசிரியா் மோ. மீனாட்சி நன்றி கூறினாா். முழு நேரக் கல்லூரி உதவியாளா் சிவராமன், உடற்கல்வி இயக்குநா் ஏ.வி. முத்துக்குமரன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஜி. புவனேஸ்வரி, உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.