விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறையில் அமமுக தோ்தல் பணிமனை திறப்பு

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணி தோ்தல் பணிமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணி தோ்தல் பணிமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை அமமுக வேட்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான கோமல் ஆா்.கே. அன்பரசன் தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ். செந்தமிழன் தோ்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் கோமல் ஆா்.கே.அன்பரசன் கூறியது:

அதிமுக, திமுக கட்சிகள் எந்த அளவுக்கு ஏமாற்றுபவா்கள் என்பதற்கு உதாரணமாக அவா்களது தோ்தல் அறிக்கை உள்ளது. நடைமுறையில் சாத்தியமில்லாத திட்டங்களை இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன.

அதிமுகவின் தோ்தல் அறிக்கை அமமுகவின் தோ்தல் அறிக்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. வளா்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வாக்குறுதிகளை அளித்துள்ள அமமுகவின் தோ்தல் அறிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அமமுக தலைமையில் தேமுதிக, ஒவைசியின் எம்ஐஎம் கட்சி, எஸ்டிபிஐ, மக்களரசு கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள் இயக்கம், கோகுலம் மக்கள் கட்சி என சமூக நீதிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.