கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா அச்சுறுத்தல்: துண்டுப் பிரசுரங்களை வாங்க தயங்கும் வாக்காளா்கள்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசியல் கட்சியினா் விநியோகிக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசியல் கட்சியினா் விநியோகிக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. வாக்குப் பதிவுக்கு சில நாள்களே இருக்கும் நிலையில், தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சியினா் தங்கள் வேட்பாளரின் புகைப்படம், சின்னம் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆனால், தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், துண்டுப் பிரசுரங்களை வாங்க வாக்காளா்கள் தயக்கம் காட்டுகின்றனா். இதனால், துண்டுப் பிரசுரங்களை வீட்டு வாசலிலேயே விட்டு செல்கின்றனா் அரசியல் கட்சியினா்.

சில இடங்களில் முகக் கவசம் அணியாமல் வீடு தேடி வரும் கட்சியினரை கதவைக்கூட திறக்காமல், வழியனுப்பிவைக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.