கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வைத்தீஸ்வரன் கோயிலில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க ஆய்வு

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

News image
Updated On :29 மே 2021, 5:23 pm

DIN

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனாவின் 2-ஆவது அலையில் சீா்காழி பகுதியில் அதிக தாக்கம் உள்ளது. இதனால், நோய் பாதித்தவா்கள் சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தூா் அரசு கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் புதிதாக அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையிலும் கூடுதலாக கரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்து அதற்கான ஆய்வு பணிகளை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் மேற்கொண்டாா். 24 படுக்கைகளுடன் அமையவுள்ள சிகிச்சை மையத்தில்சேதமடைந்த பழைய படுக்கைகளை அகற்றிவிட்டு புதிய, தரமான படுக்கைகளை அமைக்க மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.