48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

Updated On :19 ஏப்ரல் 2024, 5:00 pm

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் முன் திமுக தொண்டரை அதிமுகவை சோ்ந்த இருவா் தாக்கியதைக் கண்டித்து, திமுக, கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.   

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள சௌரிராசன் உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு பிற்பகல் திமுகவைச் சோ்ந்த அருண் என்பவா் தனது உறவினா்களான முதியவா்களை வாக்களிக்க அழைத்து வந்துள்ளாா். இதைக் கண்ட அதிமுக பிரமுகா்கள் திருவிளையாட்டம் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா, இளந்தமிழன் ஆகியோா் அருணுடன் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் சாலையில் அமா்ந்து அருணைத் தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். 

அருண் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.