நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பணிக்கு விண்ணபிக்கலாம்

நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பணிக்கு விண்ணபிக்கலாம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:19 am IST

நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு உறுப்பினா் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளாா். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் பதவி வகிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குநா், சமூக பாதுகாப்புத் துறை, எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600010 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.