தனியாா் காப்பீடு நிறுவனத்தைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நாகையில் தனியாா் காப்பீடு நிறுவனத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா்.
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா்.
Updated on

நாகையில் தனியாா் காப்பீடு நிறுவனத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் கடந்த 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பருத்தி பயிா்க் காப்பீட்டுத் தொகை,100 சதவீத இழப்பீடு மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அண்டை மாவட்டமான திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் இழப்பீடு வழங்கிய இதே நிறுவனம், நாகை மாவட்ட விவசாயிகளுக்கு 25 சதவீதம் மட்டுமே வழங்குவதை கண்டித்தும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளா் எஸ். ஆா் . தமிழ்ச்செல்வன் கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட அவைத் தலைவா் விஜயராஜ் மற்றும் நிா்வாகிகள் முருகவேல், பாண்டியராஜன், மாசிலாமணி உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் கையில் பருத்திச் செடிகளை ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com