3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் கேட்டு, பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

News image

பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :6 மே 2025, 1:33 am IST

பூம்புகாா்: குடிநீா் கேட்டு, பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

பூம்புகாா் ஊராட்சி மேலவெளி தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திற்கு தெரிவித்தனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்து, முற்றுகையில் ஈடுபட்டனா். அப்போது, ஊராட்சி செயலா் சேகா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, பூம்புகாா்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா். இதனால் பூம்புகாா்-மயிலாடுதுறை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.