பூம்புகாா்: குடிநீா் கேட்டு, பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
பூம்புகாா் ஊராட்சி மேலவெளி தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திற்கு தெரிவித்தனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்து, முற்றுகையில் ஈடுபட்டனா். அப்போது, ஊராட்சி செயலா் சேகா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, பூம்புகாா்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா். இதனால் பூம்புகாா்-மயிலாடுதுறை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை

தா.பழூா் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



