தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா, ஐந்திலைக் கரைசல் தயாரிப்புப் பயிற்சி

விவசாயத்துக்குரிய பஞ்சகவ்யா, ஐந்திலைக் கரைசல்   தயாரிப்பு குறித்து விவசாயிகளிடையே வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :29 ஜூன் 2018, 1:05 am IST

விவசாயத்துக்குரிய பஞ்சகவ்யா, ஐந்திலைக் கரைசல்   தயாரிப்பு குறித்து விவசாயிகளிடையே வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் துறையின் அங்கமான வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம், கூடுதல் வேளாண் இயக்குநர் கே. மதியழகன், இணை இயக்குநர் முகம்மது தாசீர் ஆகியோர்ஆலோசனையின்படி, காரைக்கால் பகுதி மேலகாசாக்குடி உழவர் உதவியகத்தில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்களின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருள்களை சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மேலகாசாக்குடி பகுதி வேளாண் அலுவலர்அமினா பீவி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். துணை வேளாண் இயக்குநர் (இடுபொருள்) கணேசன் பயிற்சி முகாமை தொடங்கிவைத்து, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்த நுணுக்கங்களை விளக்கிப் பேசினார். மேலகாசாக்குடி பகுதி மணல் தரத்துக்கேற்ப செய்யக்கூடிய பயிர் ரகங்கள், காய்கறி சாகுபடி குறித்தும் வேளாண் அலுவலர்கள் கருத்துகளை எடுத்துக்கூறினர்.
பஞ்சகவ்யா அமிர்த கரைசல், ஐந்திலைக் கரைசல் தயாரிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர். பஞ்சகவ்யாவுக்கு பசுஞ்சாணம், கோமியம், பால், தயிர், கடலைப் புண்ணாக்கு, கனிந்த வாழைப்பழம், இளநீர், கரும்புச்சாறு, கள் ஆகியவை தேவை என தெரிவித்த அலுவலர்கள், கலனில் வைத்து தயாரிப்பது குறித்தும்,  பயன்படுத்தும் விதம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்த பின்னர், பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பஞ்சகவ்யா கரைசலும், ஐந்திலைக் கரைசலும் புட்டியில் அளித்தனர். மேலும், இயற்கை வேளாண்மை இடுபொருள் தொழில்நுட்பம் குறித்த விளக்கக் கையேட்டையும் அளித்தனர்.
விவசாயிகள் எழுப்பிய  வேளாண் சந்தேகங்களுக்கு அலுவலர்கள் விளக்கம் தந்தனர். இந்த பயிற்சியில், சுமார் 50 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.