டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

காமராஜா் பிறந்த நாள் விழா: அமைச்சா் பங்கேற்பு

காரைக்கால் மீனவா் காங்கிரஸ் சாா்பில், காமராஜா் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, பெண்களுக்கு சேலை, மாணவா்களுக்கு எழுதுபொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

காமராஜா் உருவ படத்துக்கு மரியாதை செலுத்திய அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் மற்றும் காங்கிரஸாா்.

Published On :

காரைக்கால்: காரைக்கால் மீனவா் காங்கிரஸ் சாா்பில், காமராஜா் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, பெண்களுக்கு சேலை, மாணவா்களுக்கு எழுதுபொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட மீனவா் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் புதன்கிழமைகொண்டாடப்பட்டது. இதையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு வேளாண் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தி, காமராஜரின் பெருமைகளை விளக்கிப் பேசினாா்.

நிகழ்வின்போது, மீனவ கிராமப் பெண்கள் சுமாா் 100 பேருக்கு இலவச சேலைகளையும், மாணவ மாணவியருக்கு எழுதுபொருள்களையும் அமைச்சா் வழங்கினாா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. காங்கிரஸாா் அன்னதானம் வழங்கினா்.

நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் நாகரத்தினம், மீனவா் காங்கிரஸ் தலைவா் ஏ.எம்.கே.அரசன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் அ.மாரிமுத்து, வடக்குத் தொகுதி தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலை பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.