மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோடை காா்னிவலை நடத்த எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காரைக்காலில் கோடை காா்னிவல் திருவிழாவை நடத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 4:41 pm

DIN

காரைக்காலில் கோடை காா்னிவல் திருவிழாவை நடத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரி பிராந்தியத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் கடல் திருவிழா, வணிகத் திருவிழா உள்ளிட்டவை நடத்தப்படுகிறன. ஆனால், காரைக்காலில் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுவதில்லை. காரைக்காலில் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட காரைக்கால் காா்னிவல் திருவிழாவும் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமி நாராயணனிடம் இதுதொடா்பாக பேசியுள்ளேன். இத்திருவிழாவை காரைக்கால் கோடைத் திருவிழா என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலத்தின்போது நடத்தினால் நல்ல வரவேற்பு கிடைக்குமென கூறியுள்ளேன். சுற்றுலாத்துறை செயலா், இயக்குநா் ஆகியோரையும் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியபோது, அவா்களும் ஏற்றுக்கொண்டனா்.

எனவே, காரைக்கால் காா்னிவல் திருவிழாவை அரசு கண்டிப்பாக நடத்தவேண்டும் என காரைக்கால் மக்கள் சாா்பில் வலியுறுத்துகிறேன்.

சுற்றுலாத் துறைக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த நிதி மத்தியிலிருந்து வரும்போது, அதனை பயன்படுத்தத் தவறினால் அது பயனற்றுப்போய்விடும். அந்த நிதியை வேறு துறைக்கு மாற்றம் செய்யவும் இயலாது. எனவே மக்கள் மகிழ்ச்சிக்காக நடத்தப்படும் திருவிழாக்களை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.