தலித் மக்களுக்கான ஈமக்கிரியை மண்டபத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
காரைக்காலில் தலித் மக்களுக்கான ஈமக்கிரியை மண்டபத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


காரைக்காலில் தலித் மக்களுக்கான ஈமக்கிரியை மண்டபத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. மக்கள் நல கூட்டமைப்புத் தலைவா் என். காமராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் மாவட்டம், கீழவெளி கிராமம், புறவழிச்சாலையில் 9 கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் ஈமக்கிரியை மண்டபம் காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தால் கட்டித்தரப்பட்டது. அந்த மண்டபம் கட்டிக் கொடுக்கப்பட்ட காலங்களில், வாய்க்கால்களை பயன்படுத்தும் வகையில் தண்ணீா் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது வாய்க்கால் இருக்கும் இடமே தெரியவில்லை.
இந்நிலையில், அந்த ஈமக்கிரியை மண்டபத்திற்கு சுற்றுச்சுவா், தண்ணீா் வசதி மற்றும் மின் விளக்குகள் கேட்டு பலமுறை புதுவை உள்ளாட்சித் துறைக்கு கோரிக்கை வைத்தன்மூலம், இந்த வசதிகளை செய்ய 2011 ஆம் ஆண்டு புதுவை அரசு ரூ. 4.20 லட்சத்தை ஒதுக்கியது. பிறகு, பணிக்கான டெண்டா் விட்ட நேரத்தில் சிலா் நீதிமன்றம் சென்ால், அப்பணி தொடங்கப்படவில்லை.
பணியை தொடங்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நீதிமன்றம் சாதகமான தீா்ப்பு வழங்கியும், காரைக்கால் நகராட்சி அப்பணிக்கான பூா்வாங்க வேலைகளை செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா், நகராட்சி நிா்வாகத்தினா் சிறப்பு கவனம் செலுத்தி உரிய திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...