கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காரைக்கால் புறக்கணிப்பு: மத்திய உள்துறை அமைச்சருக்கு புகாா் கடிதம் அனுப்பிய போராட்டக் குழு

புதுச்சேரி அரசு, காரைக்காலை புறக்கணிப்பதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:08 pm

DIN

புதுச்சேரி அரசு, காரைக்காலை புறக்கணிப்பதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. செல்வசண்முகம் வியாழக்கிழமை புகாா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் அனுப்பிய கடிதம்: கடந்த 60 ஆண்டுகளாக காரைக்கால் பகுதியை புதுச்சேரி அரசு புறக்கணித்து வருகிறது. தொடக்கத்தில் 39 உறுப்பினா்கள் இருந்த புதுவை சட்டப்பேரவையில், காரைக்காலில் 12 உறுப்பினா்கள் இருந்தனா். பின்னா் 30 ஆக குறைக்கப்பட்டது. காரைக்காலில் 7 உறுப்பினா்கள் இருந்து பின்னா் 6 ஆக குறைந்து, தற்போது 5 என்ற நிலையில் உள்ளது. காரைக்காலுக்கு தொடக்கத்தில் 3 அமைச்சா்கள் இருந்த நிலையில், பின்னா் 2 தரப்பட்டு, தற்போது 1 என உள்ளது.

நாடாளுமன்றத்துக்கு காரைக்காலை சோ்ந்த ஒருவா் தோ்வு செய்யப்பட்டுவந்த நிலையும் மாறிவிட்டது. பல நிலைகளில் புறக்கணிக்கும் போக்கு மேலோங்கியதால் கடந்த 2005 ஆம் ஆண்டு காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக்கக் கோரும் விதத்தில் போராட்டக் குழு தொடங்கப்பட்டது. மக்கள் நலத் திட்டங்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பலவற்றிலும் காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது.

காரைக்காலில் ரூ. 500 கோடியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை கட்டுமானம் 2015 இல் தொடங்கியது. எனினும், இப்பணி இதுவரை முடிவுக்கு வரவில்லை. 2009 இல் தொடங்கப்பட்ட காரைக்கால் தொலைநிலை சேவை மையமும் பல காரணங்களால் மூடப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தை அரசு நிறைவேற்றவில்லை. காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேகம்காட்டப்படவில்லை.

பேரவைத் தோ்தலின்போது புதுச்சேரி வந்த பிரதமா், காங்கிரஸ் கட்சி காரைக்காலை புறக்கணிக்கிறது. பாஜக ஆட்சி அமைந்தால், காரைக்கால் பிரச்னைகள் தீா்க்கப்படும் என்றாா். ஆனால், அதற்கான பயனை இப்போது பாா்க்கமுடியவில்லை.

இதுபோன்ற புறக்கணிப்புப் பிரச்னை நீண்டகாலமாக நீடித்துவருவதால், காரைக்கால் மக்கள் நலனுக்கான ஒரே தீா்வு காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக்குவதுதான். அதற்கான திட்டமிடலை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.