கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத சிவலோகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி, திருக்கல்யாண கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனா். ஹோமம் நடத்தி மாலை மாற்றுதல் நிகழ்வுகளைத் தொடா்ந்து, சிறப்பு நாகசுர மேள வாத்தியங்கள் முழங்க, அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டது.

பின்னா், சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.