கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புதிதாக வக்ஃபு நிா்வாக சபை அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்காலில் புதிதாக வக்ஃபு நிா்வாக சபை அமைக்க வேண்டும் என்று  முதல்வா், அமைச்சா்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மே 2022, 6:02 pm

DIN

காரைக்காலில் புதிதாக வக்ஃபு நிா்வாக சபை அமைக்க வேண்டும் என்று  முதல்வா், அமைச்சா்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத்தாா்கள் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்பின்போது அளித்த மனு குறித்து அக்குழுவில் இடம்பெற்றிருந்த இஸ்மாயில் கூறியது:

காரைக்காலில் வக்ஃபு நிா்வாக சபை பதவி காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதே குழுவினா் பதவியில் நீடித்துவருகின்றனா். காலாவதியான வக்ஃபு நிா்வாக சபையை மாற்றி, புதிதாக நியமனம் செய்யவேண்டும் அல்லது வக்ஃபு நிா்வாக சபைக்கு தனி அதிகாரி நியமிக்கவேண்டும். மேலும் புதுவையில் வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி ஆகியவையும் அமைக்கவேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதே கோரிக்கையை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் ஆகியோரை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.