வைரஸ் காய்ச்சல்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை
வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா்.


வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா்.
இதுதொடா்பாக, காரைக்காலில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இதுவைரஸ் காற்றில் பரவக்கூடியதாகும். இந்த வைரஸால் பாதிப்பு எதுவும் இருக்காது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை. தும்மல், இருமல், காய்ச்சல் இதனால் ஏற்படும். இதற்காக பிரத்யேகமாக பரிசோதனை எதுவும் செய்யவேண்டியதில்லை. இந்த உபாதைகள் 2, 3 நாள்கள் வரை மட்டுமே இருக்கும். இந்த வைரஸ் நவீனமானது என கருதவேண்டாம். காற்றில் பரவக்கூடியது என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...