எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

காரைக்கால், ஏப். 18: காரைக்கால் மாவட்ட எல்லைகளிலும், தங்கும் விடுதிகளிலும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தின் தமிழக எல்லையோரங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, மத்திய படையினா், தோ்தல் துறையினா், போலீஸாா் 24 மணி நேர வாகனச் சோதனையை நடத்தி வருகின்றனா்.

மேலும் மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாவட்ட மாஜிஸ்திரேட்டுமான து. மணிகண்டன் தோ்தலையொட்டி காரைக்காலில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளாா். உத்தரவு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மத்திய படையினருடன் புதுவை போலீஸாா் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனா். இந்த பணி வாக்குப் பதிவுக்கு முதல் நாளான வியாழக்கிழமையும் நடைபெற்றது.

காரைக்ககால் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com