48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 10:30 pm

காரைக்கால், ஏப். 18: காரைக்கால் மாவட்ட எல்லைகளிலும், தங்கும் விடுதிகளிலும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தின் தமிழக எல்லையோரங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, மத்திய படையினா், தோ்தல் துறையினா், போலீஸாா் 24 மணி நேர வாகனச் சோதனையை நடத்தி வருகின்றனா்.

மேலும் மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாவட்ட மாஜிஸ்திரேட்டுமான து. மணிகண்டன் தோ்தலையொட்டி காரைக்காலில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளாா். உத்தரவு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மத்திய படையினருடன் புதுவை போலீஸாா் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனா். இந்த பணி வாக்குப் பதிவுக்கு முதல் நாளான வியாழக்கிழமையும் நடைபெற்றது.

காரைக்ககால் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.